×

கபிஸ்தலம் அருகே மது விற்ற 2 பேர் கைது

 

தஞ்சாவூர், ஏப்.29: கபிஸ்தலம் போலீஸ் சரக பகுதிகளில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் மேற்பார்வையில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கபிஸ்தலம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் புதுப்பாலம் அருகில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தஞ்சாவூர் கீழவாசல் டபீர்குளம் தெருவை சேர்ந்த கணபதி மகன் ஏழுமலை (25). என்பதும், இவர் விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து அவரிடம் இருந்து 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை அருகில் மது விற்ற திருப்புறம்பியம் உச்சி கட்டளை தெரு முருகானந்தம் மகன் சரவணன் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 22 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post கபிஸ்தலம் அருகே மது விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kapistalam ,Thanjavur ,Inspector ,Mahalakshmi ,Papanasam ,Deputy Superintendent of Police ,Ashok ,Ganapati Agraharam ,Puduppalam ,
× RELATED மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை